கவிதை

 நடை செல்லும் போது


பாலத்தின் தடுப்பு சுவர் 

மீது

பயன்பாடற்ற

அழுக்கான

ஊனமுற்ற

யானை பொம்மை

எதிரில் வந்த

பைத்தியம்

ஒன்று

பொம்மையை பார்த்து

சிரித்தது

அழுதது

தலையில் குட்டிக் கொண்டு 

உக்கியும் போட்டுக்

கொண்டது

குழந்தையால்

கைவிடப்பட்ட

பொம்மை

ஒன்று

பைத்தியத்திற்கு

கடவுளாகி

போனதோ!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாசித்த நூல்களின் பட்டியல் - 2025

"அப்பா"- சிறுகதை

கர்நாடகா பயணம் - 4