இடுகைகள்

வேனிற் காலம்

படம்
இந்த ஆண்டு கோடை காலம் மிகக் கடுமையாகவே உள்ளது. வழக்கமாக இருப்பதை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கின்றன. ஆனாலும் இந்த கோடையையும் கூடுதலாக ரசிக்க பல விஷயங்கள் நடந்தேறின. இந்த கோடையின் ஆரம்ப நாட்களில் வெள்ளி மலைக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. பயணம் சற்றே சிரமமாக இருந்தாலும் இணை உள்ளங்களோடு  மலை வழிப் பயணம் என சுவராசியத்திற்கு குறைவில்லை.  வழக்கமாக வெள்ளி மலையில் காலை நடை செல்லும் பழக்கம் உண்டு. இந்த முறை அமுதா அவ்வூரில் உள்ள குளத்தங்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றார். சிறு சிறு குடியிருப்புகளை கடந்து சென்ற போது வெட்ட வெளியான மிகப் பெரிய நிலப்பரப்பு. விவாசய நிலம் சோளம் அறுவடை நடந்து முடிந்து காலியாக விடப்பட்ட நிலம் அதன் ஒரு பகுதியில் குளம் அதனோரத்தில் மிகப் பெரிய அரசமரம் அதனடியில் ஒரு பிள்ளையார் கோவில் . அந்த இடத்திற்கு போய்ச் சேரும் வரை மனதில் ஒன்றும் தோன்றவில்லை . அரசமரத்தடியில் நின்று வேனலின் விடியலில் அந்த நிலத்தின் முழுப் பரப்பையும் பார்த்த போது பொன்னென மினுங்கிக் கொண்டிருந்தன!.... தூரத்தில் குடியிருப்பில் எதையோ எரித்து கொண்டிருக்க அதில் புகையெழுந்து அ...

ஜே.ஜே. சில குறிப்புகள் வாசிப்பனுபவம்

சு.ரா. வின் ஜே.ஜே. சில குறிப்புகள் புத்தகம் மூன்று வருடங்களுக்கு முன் வாசித்தது..போன வருடம் சு.ராவின் கட்டுரை தொகுப்புகள் சிலவும், ஒரு புளியமரத்தின் கதை நாவலும்  வாசித்த பிறகு இந்த புத்தகத்தை மறுவாசிப்பு செய்யலாம் என்று எண்ணம்  எழுந்திருந்தது.  முதல் வாசிப்பில் சு. ரா. வின் கச்சிதமான மொழி நடையும் நாவல் முழுவதும் தெறித்திருக்கும் கூர்மையான சொற்பிரயோகங்களும் கையில் பென்சில் எடுத்திருந்தால்   அடி கோடிட்டு செல்ல வேண்டிய ஏராளமான வாக்கியங்களையும் கொண்ட ஒரு புத்தகமாக  நினைவில் இருந்தது. இன்று மீண்டும் வாசிக்கையில் அந்த உணர்வை சிறிதும் இழக்காமல் அதே புத்துணர்வோடு வாசிக்க முடிந்தது.  ஆனால் வாசிப்பின் வேகம் குறைந்திருந்தது. சில பாராக்களை மீண்டும் மீண்டும் வாசித்து லயித்து கொண்டிருந்தேன். சில பாராக்களை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாமல் தவித்தும் போயிருந்தேன் ஜே. ஜே. சில குறிப்புகள் வழக்கமான கதை சொல்லும் பாணியில் அமைந்த நாவல் அல்ல. இந்த நாவலை ஒரு வரியில் சொல்லுவது என்றால் பாலு என்கிற எழுத்தாளர் தன் ஆதர்ஷ மலையாள எழுத்தாளரான ஜே.ஜே. வை தமிழ் இலக்கிய உலகிற்கு அறிம...

மழைப்பாடல் -குறிப்புகள்

மண்ணில் ஒவ்வொரு உயிரும்  தன் தாகத்தை தணித்து கொள்ள விண்ணை நோக்கி இறைஞ்சி நிற்கின்றன. உயிர்களின் இறைஞ்சுதலுக்கு விண்ணவனும் அருளுகின்றான். அவன் அருள் தாகத்தை தணிக்கும் ஆனால் அது யாருக்கு, எப்போது, எங்கு என  அவன் மட்டுமே அறியும் ஆடலில் அல்லவா இருக்கிறது . பாரதவர்ஷமோ தன்னை ஆளப் போகும் பேரரசன் யார் என்ற தவிப்பில் இருக்க  குருதி மழை கொண்டு தன் தாகத்தை தணித்துக் கொள்ளுமோ எனும் அச்சத்தில் ஒவ்வொருவரும் வேண்டியும் , விலக்கியும் ஒரு அரசு சூழ்தலை  நிகழ்த்தி பார்க்கிறார்கள். மாந்தர்கள் தானியற்றிய சூழ்தலில்   சிக்கியும், உழன்றும், சில நேரங்களில் நிறைந்தும் , பின் கனிந்தும் விடுபடுகிறார்கள். ஆனாலும் இயற்கை அவ்வளவு எளிதில் தன் ஆடலை முடித்து கொள்வதில்லை தானே! அங்கு எப்போதும் மழை வேண்டி பாடும் தவளையின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன. தேவபாலபுரத்தில் பீஷ்மர் இருக்கையில் அஸ்தினபுரியில் இருந்து தூது வர கிளம்புகிறார். தொடர்ந்து அரண்மனைக்குள்  அரசியர்கள் இருவர்களுக்குள்ளும் மோதல்களும் கசப்புகளும் இருப்பதை உணர்ந்திருந்த  சத்யவதி திருதாவின் திருமணத்திற்கான  ம...

கவிதையும் கணிதமும்

கடந்த தத்துவ வகுப்பில் நண்பர் இளையராஜா ஜெ தளத்தில் எழுதிய "பொய்பித்தல்வாதம்vsபேய்சியன்வாதம்"  என்ற அறிவியல் கட்டுரையை அறிமுகப்படுத்தினார். வீட்டிற்கு வந்ததும் ஜெ தளத்தில் அந்த கட்டுரையை தேடிப் பார்த்ததில் அகப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் ஜெ தளத்தில் வாசித்து கொண்டிருக்கும் போது அறிவிப்பு பகுதியில் பார்த்து கிளிக்கி அந்த பக்கங்களை எனது வாட்ஸப் எண்ணில் சேகரித்து வைத்து கொண்டேன் . ஜெலின் முன்னுரை மற்றும் நான்கு பகுதிகளாக இருந்த இளையராஜாவின் கட்டுரையை நேற்று வாசித்து முடித்தேன். சுவாரசியமான கட்டுரைதான்... ஆனால் என்னால் துல்லியமாக புரிந்து கொள்ள முடிந்ததா என்றால் கேள்விக்குறிதான். .இயலாமை  எப்பொழுதும் பெரும் சீண்டலாகத்தான் இருக்கிறது . அதற்கான வழியாக  எழுதி தொகுத்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது. முதலில் இந்த கட்டுரையில் புரிந்து கொள்ள முடியாத பகுதியாக இருந்தது கணிதச் சமன்பாடுகள் தான் . ஆனால் ஆசிரியர் சமன்பாடுகளுக்கான விளக்கத்தை தான் கொடுத்திருக்கிறார். ஆனாலும் எனக்கு கணிதத்துறை சார்ந்து   அறிதல்கள் மீச்சிறு அளவு என்கிற போது புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. எ...

ஈராறு கால் கொண்டெழும் புரவி - குறிப்புகள்

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆசிரியர் ஜெயமோகன் தளத்தில் இருக்கும் கதைகளையும், குறுநாவல்கள் மட்டுமே வாசித்து கொண்டிருப்பேன். அப்பொழுதெல்லாம் புத்தகம் வாங்கும் பழக்கமும் இல்லை. நூலகங்களில் புத்தகம் எடுத்து வாசிப்பதும், இணைய தளங்களில் வாசிப்பதுமாகவே பழக்கமாயிருந்தது. அப்படி வாசித்து வந்த காலத்தில் ஜெயின் இந்த குறுநாவலை வாசித்திருந்தேன். பெரிதாக புரியவில்லை என்றாலும் கூட வாசிப்பின்பம் அலாதியாகவே இருந்தது. கதையின் பல இடங்களில் உணர்வு நிலைகள் என்னை தீண்டக் கூடியதாக இருந்தது. வரும் திங்கட்கிழமை கூட்டு வாசிப்பனுபவ பகிர்வை இணைய சந்திப்பின் வழியாக ஐரோப்பிய விஷ்ணுபுரம் வட்டம் நிகழ்த்த விருப்பதாக நண்பர் ஸ்ரீராம் தகவல் அனுப்பியிருந்தார். மணி அண்ணா நாவலை பற்றி ஒரு உரை ஆற்ற விருப்பதாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் மறுவாசிப்பு செய்யலாம் என நினைத்து நேற்றிரவு வாசிக்க தொடங்கி இன்று மதியம் முடித்திருந்தேன். சைவ சித்தாந்தத்தை மையமாக கொண்டு  எம். சாத்தன் குட்டி பிள்ளை என்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கை கதையாக நன்றாகவே நினை விருந்தது. இந்த மறுவாசிப்பில் என்னை மிகவும் ஈர்த்தது கதையில் வரும் திருமந்...

ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் டேவிட் போம் உரையாடல் - 2

கடந்த பதிவில் காலம் பற்றிய கேள்வி எழுந்து வந்தது இல்லையா? உரையாடலுக்கு நடு நடுவே ஜே.கே.விற்கு மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. அகவயமாகவும், புறவயமாகவும்  மாற்றங்களில் காலம்  எப்படி செயல்படுகிறது என்ற உரையாடலில் உளவியல் ரீதியாக காலம் (psychological time) என்ன செய்கிறது என்ற இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். அந்த வகையில் மனம் (mind) என்பது காலத்திற்கு உட்பட்டது அல்ல. அதற்கு கடந்த காலம், எதிர்காலம் என்றில்லாமல் நிகழ் தருணத்திலேயே திகழக் கூடியதாக உள்ளது. ஆனால் மூளை காலத்திற்குட்பட்டு செயல்படுகிறது. அவ்வாறெனில் அனைத்து முரண்களின் மூலம் காலமா என கேள்வி எழுப்புகிறார் ஜே.கே. அதற்கு போம் உளவியல் நேரத்தை தானே குறிப்பிடுகிறீர் என கேட்க ஜே.கே ஆம் என கூறிவிட்டு நாம் பொருளற்ற விவாவதங்களை செய்கிறோமோ... என கேட்டுவிட்டு ... அப்படி அல்ல இது எல்லாமே பொருட்படுத்த வேண்டியவை தான் என்று கூறி சிரித்துக் கொள்கிறார். மூளையின் அனைத்துப் பகுதிகளும் காலத்திற்குட்பட்டு இயங்குவதில்லை. ஒரு பகுதியை மட்டும்தான் காலம் ஆள்கிறது. பின் அறிவுச் செயல்பாடு அனைத்தும் காலத்தை சார்ந்து தான் செயல்படுகிறது என்கிறார். //அவன் அ...

ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் டேவிட் போம் உரையாடல் - 1

 ஜே. கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாடும் டேவிட்  போம் காணொளியை பார்ப்பதற்கு முன்பாக போம் பற்றி இணையம் வழியாக சில தகவல்களை அறிந்து கொண்டேன். போம் அடிப்படையில் ஒரு இயற்பியலாளர். இவருடைய மேற்கோள் ஒன்று என்னை மிகவும் ஈர்த்தது மேலும் அது பிரம்ம சூத்திரம்  நூலில் உள்ள ஒரு சூத்திரத்தை நினைவுபடுத்தியது. "Everything is related to everything else as an endless dynamic process of unfolding and en folding.               - David Bhom அனுபத்த ஆதிப்ய  பிரக்ஞா அந்தர பிருஹதக்வத் திருஷ்ட ச தத் உக்தம் - பிரம்ம சூத்திரம் 3.3.51, 3.3.52 டேவிட் போம் குவாண்டம் கேரட்பாட்டில் முக்கியமான பங்களித்திருக்கிறார். மேலும் நரம்பியல் மற்றும் உளவியல் துறைகளிலும் அவருடைய பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த சிறு அறிமுகத்தைக் கொண்டு காணொளியினை பார்க்கத் துவங்கினேன்.     இந்த உரையாடல் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஓஜாய் என்ற ஊரில் 1980 வருடம் நடைபெற்றது  ஜே. கிருஷ்ணமூர்த்திக்கு 85 வயதும்,      போமிற்கு 63 வயதும் இருக்கலாம். இந்த காண...