வேனிற் காலம்
இந்த ஆண்டு கோடை காலம் மிகக் கடுமையாகவே உள்ளது. வழக்கமாக இருப்பதை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கின்றன. ஆனாலும் இந்த கோடையையும் கூடுதலாக ரசிக்க பல விஷயங்கள் நடந்தேறின. இந்த கோடையின் ஆரம்ப நாட்களில் வெள்ளி மலைக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. பயணம் சற்றே சிரமமாக இருந்தாலும் இணை உள்ளங்களோடு மலை வழிப் பயணம் என சுவராசியத்திற்கு குறைவில்லை. வழக்கமாக வெள்ளி மலையில் காலை நடை செல்லும் பழக்கம் உண்டு. இந்த முறை அமுதா அவ்வூரில் உள்ள குளத்தங்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றார். சிறு சிறு குடியிருப்புகளை கடந்து சென்ற போது வெட்ட வெளியான மிகப் பெரிய நிலப்பரப்பு. விவாசய நிலம் சோளம் அறுவடை நடந்து முடிந்து காலியாக விடப்பட்ட நிலம் அதன் ஒரு பகுதியில் குளம் அதனோரத்தில் மிகப் பெரிய அரசமரம் அதனடியில் ஒரு பிள்ளையார் கோவில் . அந்த இடத்திற்கு போய்ச் சேரும் வரை மனதில் ஒன்றும் தோன்றவில்லை . அரசமரத்தடியில் நின்று வேனலின் விடியலில் அந்த நிலத்தின் முழுப் பரப்பையும் பார்த்த போது பொன்னென மினுங்கிக் கொண்டிருந்தன!.... தூரத்தில் குடியிருப்பில் எதையோ எரித்து கொண்டிருக்க அதில் புகையெழுந்து அ...