இடுகைகள்

தத்துவமும் அறிவியலும்

கடந்த சில மாதங்களாக வேறு வேறு துறை சார்ந்த கட்டுரைகள் வாசிக்க நேர்ந்தது. நாராயண குருவின் ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் (விளக்கம் நித்ய சைத்தன்ய யதி )கார்லோவின் இயற்பியலின் ஏழு சுருக்க குறிப்புகள், வாசித்து முடித்த நிலையில் தற்சமயம் ராமசந்திர குஹா எழுதிய தென்னாப்பிரிக்காவில் காந்தி, பிறகு நன்மாறன் எழுதிய  டார்வின் பற்றிய இணைய தொடர் ஒன்றும் வாசித்து கொண்டிருக்கிறேன்.  முதலிரண்டு கட்டுரைத் தொகுப்பு வாசிப்பில்  அறிவியலும் தத்துவமும் தொடும் புள்ளியை உணர முடிந்தது. கார்லோவின் புதினத்தை தமிழில் மொழி பெயர்த்த சங்கரன் அவர்களுடன் உரையாடவும் வாய்ப்பு அமைந்தது. அந்த உரையாடலை இப்படி தொகுத்து கொள்கிறேன். மானுட மனத்திற்கு காலம் காலமாக  ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கிறது , அந்த பிரக்ஞையை உணர்ந்தவன் தன் அறிதலை அறிவியல், தத்துவம், இலக்கியம் , வரலாறு என்று பல துறைகளின் வாயிலாக ஆய்ந்து விளங்கி கொள்ள முயல்கிறான். அந்த சிந்தனை வழி முறைகளில் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றையொன்று தொட்டுச் சொல்வதை உணர்ந்து நாம்   மேலும்  நம் அறிதலை புரிந்து கொண்டு விரித்து  எடுத்து செல்ல முயலுகிறோம...

கவிதை வாசிப்பு

2024 ஆம் வருடம் அக்டோபர் மாதம் நூலகத்தில் இருந்து எடுத்து வந்த கா.நா.சு. வின் இலக்கிய விமர்சன கட்டுரை நூலின் பரிந்துரையின் காரணமாக யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் வாசிக்க விருப்பமாயிருந்தது. கா.நா. சு. அவர்கள் பாரதி நினைவுகள் புத்தகத்தின் சில பகுதிகளையும் இணைத்திருந்தார். அதனை வாசித்த போது பாரதியை கண் முன் கொண்டு வந்த அம்மாளின் மொழிநடையே கவர்ந்திருந்தது. அதை தொடர்ந்து ஷீலா மைனியிடம் இந்த புத்தகத்தை வாங்கி வந்து நேற்று (12.1. 26 ) வாசிக்க ஆரம்பித்து இன்று காலை முடித்தேன். யதுகிரி அம்மாள் புதுச்சேரியில் வாழ்ந்த போது  பாரதியுடனான உரையாடல்கள் வழியாக இந்த புத்தகம் விரிகிறது. 10 வருட பாரதியுடனான அவருடைய அனுபவம் சில காட்சி தொகுப்புகளாக ஒரு சிறுமியின் பாரதியை அணுக்கமாக அறிய வைக்கிறார். பாரதிக்கும் செல்லம்மாவிற்கும் உள்ள உறவு, அவருடைய நட்புகள், அவருடைய கவிதைகள் எழுந்து வந்த சூழல்கள், உணர்வு நிலைகள் மற்றும் குழந்தைகள், பெண்களிடத்தில் கொண்ட தனித்துவமான உரையாடல்கள், சிந்தனைகள் என பாரதியின் அன்றாடங்களிலிருந்தே நம்மால் உணரும் அளவிற்கான அழகிய மொழிநடை. அதே போல் சிறுமியாக ஒரு கவிஞனின் அலைக்கழிப்ப...

பாரதி நினைவுகள் -யதுகிரி அம்மாள்

2024 ஆம் வருடம் அக்டோபர் மாதம் நூலகத்தில் இருந்து எடுத்து வந்த கா.நா.சு. வின் இலக்கிய விமர்சன கட்டுரை நூலின் பரிந்துரையின் காரணமாக யதுகிரி அம்மாளின் பாரதி நினைவுகள் வாசிக்க விருப்பமாயிருந்தது. கா.நா. சு. அவர்கள் பாரதி நினைவுகள் புத்தகத்தின் சில பகுதிகளையும் இணைத்திருந்தார். அதனை வாசித்த போது பாரதியை கண் முன் கொண்டு வந்த அம்மாளின் மொழிநடையே கவர்ந்திருந்தது. அதை தொடர்ந்து ஷீலா மைனியிடம் இந்த புத்தகத்தை வாங்கி வந்து நேற்று (12.1. 26 ) வாசிக்க ஆரம்பித்து இன்று காலை முடித்தேன். யதுகிரி அம்மாள் புதுச்சேரியில் வாழ்ந்த போது  பாரதியுடனான உரையாடல்கள் வழியாக இந்த புத்தகம் விரிகிறது. 10 வருட பாரதியுடனான அவருடைய அனுபவம் சில காட்சி தொகுப்புகளாக ஒரு சிறுமியின் பாரதியை அணுக்கமாக அறிய வைக்கிறார். பாரதிக்கும் செல்லம்மாவிற்கும் உள்ள உறவு, அவருடைய நட்புகள், அவருடைய கவிதைகள் எழுந்து வந்த சூழல்கள், உணர்வு நிலைகள் மற்றும் குழந்தைகள், பெண்களிடத்தில் கொண்ட தனித்துவமான உரையாடல்கள், சிந்தனைகள் என பாரதியின் அன்றாடங்களிலிருந்தே நம்மால் உணரும் அளவிற்கான அழகிய மொழிநடை. அதே போல் சிறுமியாக ஒரு கவிஞனின் அலைக்கழிப்ப...

நாவல் கோட்பாடு - வாசிப்பனுபவம

நண்பர் யதார்த்தன் நான் போன வருடம் வாசித்த நூல் பட்டியல்களைப் பார்த்து விட்டு குறிப்புகள் எடுத்து வாசித்ததை தொகுத்து எழுதுவதையும் செய்யுங்கள் என அறிவுறுத்தினார். நானுமே வெ.மு. மறுவாசிப்பில் தொகுத்து எழுதனும் என திட்டமிருந்திருந்தேன். அதன்படி குறிப்புகள எடுக்க தொடங்கியிருந்தேன். மேலும் யதார்த்தன் வாசிப்பை மேம்படுத்தவும் , தொகுத்து எழுதவும் அடிப்படை நூல்கள் வாசிப்பு மிக அவசியம் என ஜெ யின் நாவல் கோட்பாடு மற்றும் எழுதும் கலை புத்தகங்களை அடிக்கடி வாசிப்பதை வழக்கமாக்கி கொள்ளும்படியும் கூறினார். அவர் பரிந்துரையின் படி நீண்ட நாட்களாக எடுத்து வாசிக்க ஆரம்பித்து பிறகு வாசிக்கலாம் என தள்ளிப் போட்டு கொண்டே இருந்த நாவல் கோட்பாடு புத்தகத்தினை கடந்த வாரம் வாசிக்க தொடங்கினேன். பத்து கட்டுரைகளுடன் 84 பக்க அளவுகள் கொண்ட புத்தகம் . நூல் எழுதப்பட்ட சூழலையும் , அவசியத்தையும் முன்னுரையில் ஆசிரியர் கூற இலக்கியத்தின் வடிவம் பற்றி ஆராயும் அமைப்பு என்ற கட்டுரையில் தொடங்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் நாவல் வடிவத்தை எப்படி அடைந்தது பற்றிய ஒரு நீண்ட விவரிப்பை ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.எது நாவலாகும், அந்த ஆ...

நிலவளம் - நட்ஹாம்சன் வாசிப்பனுபவம்

1920 ல் நட்ஹம்சன் (நார்வே )அவர்கள் எழுதிய நோபல் பரிசு பெற்ற நாவல் நிலவளம் (Growth of Soil) அடர்ந்த காட்டினை திருத்தி நிலத்தினை பண்படுத்தி வேளான்மை செய்து தன் வாழ்க்கையை தொடங்கிய ஒரு மனிதனின் கதை . காட்டாளன் போல் இருக்கும் ஐசக் கிராமம் நகரம் துறந்து காட்டில் தன் வாழ்க்கையை தொடங்கியவனுக்கு உதடு பிளந்த இங்கர் வாழ்க்கைத் துணையாக வர இருவரது உழைப்பினால் பெரிய பண்ணையை உருவாக்குகிறார்கள். பிள்ளைகள் பிறக்கிறார்கள். புதிதாக உருவாகிய பண்ணையை பார்வையிட வந்த அரசாங்க அதிகாரி நிலத்தினை ஐசக்கிற்கே உரிமை கொள்ள வழிநடத்துகிறான். அதிகாரி தற்செயலாக அந்நிலத்தின் கனிம வளத்தை கண்டறிந்து சுரங்கம் உருவாக்கவும் திட்டமிட்டு பின்னாட்களில் சுரங்கம் உருவாகி நாவல் முடிவில் பல்வேறு காரணங்களால் கைவிடப்படுகிறது. ஐசக்கின் பண்ணையும், கனிம வளமும் அந்நிலத்தை சுற்றி சில பண்ணைகளும், கடைகளும் என உருவாகி வருகிறது. மையக் கதாபத்திரமான ஐசக் கடுமையான உழைப்பாளியாக இருக்கிறான். தனது வேளாண் வாழ்க்கையிலும் ,உறவுகளிலும் எத்துனை சிக்கல்கள் வந்தாலும் மிகப் பொறுமையாக கையாள்கிறான் . அவனுக்கு மனதில் பல வித சங்கடங்கள் இருந்தாலும் எதனை...

முதற்கனல் (வெண்முரசு)வாசிப்பனுபவம்

 பிரபஞ்சம் உருவாக்கத்திற்னான முதற் கனல் தோன்றியதில் நாவல் தொடங்கி  நிகழவிருக்கும் பாரதப் போருக்கான முதற்கனல் எப்படி நிகழ்ந்தேறியது என சொல்லவிருக்கும் நாவலாக என நான் அவதானித்துக் கொண்டேன். மானசா தேவி தன் மகன் ஆஸ்திகனுக்கு தன் குலம் வழித்தோன்றல் கதையை கூறி மேலும் நாகர் குலத்தினை காக்கும் பொருட்டு மகனை அஸ்தினாபுரிக்கு பயணம் மேற்கொள்ளச் செய்கிறாள் . அஸ்தினாபுரி நிலத்திருந்து பாரதவர்ஷத்தின் கதை ஆரம்பிக்கிறது . சந்தனு சத்யவதி இணையர்கள் கதை ஆரம்பிக்கும் போதே நிமித்திகன் "தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டது " என்கிறான். அவர்களுக்கு பிறக்கும் மகன்கள் சித்ராங்கதன் மற்றும் விசித்திர வீரியன். சித்ராங்கதன் அழகன். தன் இச்சையை தனக்குள்ளேயே நிகழ்த்திக் கொள்வதிலே நிறைவு கொள்பவன். அதனாலேயே நாட்டை ஆளக்கூடிய வல்லமை இருந்தும் அலையடிக்கும் மனதுடனே இருந்தான். திருமணம் ஆகியும் அந்தப்புரத்திற்குள் செல்லாதவன். வேட்டை விலங்கை அடைந்தே தீரும் நோக்குடன் கானகம் புகுந்த போது அங்கிருக்கும் சுனை ஒன்றில் வசிக்கும் சித்ராங்கதன் எனும் கந்தர்வனால் இழுக்கப்பட்டு விடுகிறான் விசித்திரவீரியன் பிறவி நோயாளியாக இர...

வாசித்த நூல்களின் பட்டியல் - 2025

 1. கார்கடல் - ஜெயமோகன் 2. குரு - ஹெச்.எஸ்.சிவபிரகாஷ் 3. வாழ்வின் அர்த்தம் - விக்டர் பிராங்கல் 4. பாஞ்சாலி சபதம் - சுப்பிரமணிய பாரதி 5. சிற்பக் கலை ஆய்வு அணுகுமுறைகள் - அம்பை மணிவண்ணன் 6. கோரா - தாகூர் 7. ஒளவிய நெஞ்சம் - அமலன் ஸ்டேன்லி 8. இயற்கை - எமர்சன் 9. நவீன தமிழ் இலக்கிய அறிமுகம் - ஜெயமோகன். 10. பிரம்ம சூத்திரம் - ஆசுதோஷானந்தர் 11. ஆரோக்கிய நிகேதனம் - தாரா சங்கர் பந்தோபாத்யாய 12. இருட்கனி - ஜெயமோகன் 13. ஆரம்பகட்ட முதலாளியமும், தமிழ்சமுதாயமும் - ராஜ் கெளதமன் 14. சொல்வளர்க்காடு - ஜெயமோகன் 15. தீயின் எடை - ஜெயமோகன் 16.  தத்துவத்தில் கனிதல் - நித்ய சைதன்ய யதி 17. ஆழ்நதியை தேடி - ஜெயமோகன் 18. இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும், அழிந்தனவும் - தேவி பிரசாத் சட்டோபாத்யாய 19. ஈஸாவாஸ்ய உபநிஷத் - ஓர் அனுபவம் - நித்ய சைத்தன்ய யதி 20. தலைமுறைகள் - நீல பத்மநாபன் 21. கிராதம் - ஜெயமோகன் 22. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி 23. காவியம் - ஜெயமோகன் 24. நீர்ச்சுடர் - ஜெயமோகன் 25. நீல நிழல் - ஜெயமோகன் 26 விஷ்ணுபுரம் - ஜெயமோகன் 27.   வாக்குமூலம் - வண்ணநிலவன் 28. களிற்று யா...