தத்துவமும் அறிவியலும்
கடந்த சில மாதங்களாக வேறு வேறு துறை சார்ந்த கட்டுரைகள் வாசிக்க நேர்ந்தது. நாராயண குருவின் ஆன்மாவிற்கு நூறு பாடல்கள் (விளக்கம் நித்ய சைத்தன்ய யதி )கார்லோவின் இயற்பியலின் ஏழு சுருக்க குறிப்புகள், வாசித்து முடித்த நிலையில் தற்சமயம் ராமசந்திர குஹா எழுதிய தென்னாப்பிரிக்காவில் காந்தி, பிறகு நன்மாறன் எழுதிய டார்வின் பற்றிய இணைய தொடர் ஒன்றும் வாசித்து கொண்டிருக்கிறேன். முதலிரண்டு கட்டுரைத் தொகுப்பு வாசிப்பில் அறிவியலும் தத்துவமும் தொடும் புள்ளியை உணர முடிந்தது. கார்லோவின் புதினத்தை தமிழில் மொழி பெயர்த்த சங்கரன் அவர்களுடன் உரையாடவும் வாய்ப்பு அமைந்தது. அந்த உரையாடலை இப்படி தொகுத்து கொள்கிறேன். மானுட மனத்திற்கு காலம் காலமாக ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்கிறது , அந்த பிரக்ஞையை உணர்ந்தவன் தன் அறிதலை அறிவியல், தத்துவம், இலக்கியம் , வரலாறு என்று பல துறைகளின் வாயிலாக ஆய்ந்து விளங்கி கொள்ள முயல்கிறான். அந்த சிந்தனை வழி முறைகளில் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றையொன்று தொட்டுச் சொல்வதை உணர்ந்து நாம் மேலும் நம் அறிதலை புரிந்து கொண்டு விரித்து எடுத்து செல்ல முயலுகிறோம...